Friday, June 6, 2014

அரசன்குளம் பகுதியில் ஆணின் சடலம் மீட்பு



வவு­னியா ஓமந்தை அர­சன்­குளம் பகு­தி­யில புகை­யி­ரத பாதை­யோ­ர­மாக ஆண் ஒரு­வரின் சடலம் அடி­பட்­ட­கா­யங்­க­ளுடன் நேற்றுக்காலை மீட்­கப்­பட்­டுள்­ளது.



 
இது­வ­ரையில் அடை­யாளம் காணப்­ப­டாத சட­ல­மா­னது சுமார் 60 வயது மதிக்­க­தக்க வெள்ளை நிற சேட்டும் வெள்ளை நிற வேட்­டியும் அணிந்­தி­ருந்த நிலையில் மீட்கப்­பட்­டுள்­ளது. இச்­ச­டலம் தலைப்­ப­கு­தியில் அடி­பட்­ட­கா­யங்­க­ளுடன் உடல் பகு­தியில் ஆங்காங்கே சிறு காயங்­க­ளுடன் காணப்­ப­டுகி­றது.
 
புகை­யிர­தத்தில் பயணிக்கும் பொழுது தவறி விழுந்­தி­ருக்­கலாம் அல்லது யாரா­வது தள்ளி விழுத்­தி­யி­ருக்­கலாம் என சந்­தே­கிக்­கப்­ப­டுகி­றது. நேற்று அதி­காலை குறித்த பிர­தே­சத்தின் பிர­தே­ச­வாசி மாடு மேய்ப்­ப­தற்­காக சென்­றி­ருந்­த­வேளை அடை­யாளம் காணப்­பட்டு பொலி­ஸா­ருக்கு தெரி­விக்­கப்­பட்­டது.
 
கொழும்­பி­லி­ருந்து யாழ்ப்­பாணம் நோக்கி சென்ற புகை­யி­ர­தத்தில்பயணித்த பயணியாக இருக்கலாம்என சந்தேகிக்கப்படுகிறது மேலதிக விசாரணையை ஓமந்தை பொலிஸார் நடத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment