வவுனியா ஓமந்தை அரசன்குளம் பகுதியில புகையிரத பாதையோரமாக ஆண் ஒருவரின் சடலம் அடிபட்டகாயங்களுடன் நேற்றுக்காலை மீட்கப்பட்டுள்ளது.
இதுவரையில் அடையாளம் காணப்படாத சடலமானது சுமார் 60 வயது மதிக்கதக்க வெள்ளை நிற சேட்டும் வெள்ளை நிற வேட்டியும் அணிந்திருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது. இச்சடலம் தலைப்பகுதியில் அடிபட்டகாயங்களுடன் உடல் பகுதியில் ஆங்காங்கே சிறு காயங்களுடன் காணப்படுகிறது.
புகையிரதத்தில் பயணிக்கும் பொழுது தவறி விழுந்திருக்கலாம் அல்லது யாராவது தள்ளி விழுத்தியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. நேற்று அதிகாலை குறித்த பிரதேசத்தின் பிரதேசவாசி மாடு மேய்ப்பதற்காக சென்றிருந்தவேளை அடையாளம் காணப்பட்டு பொலிஸாருக்கு தெரிவிக்கப்பட்டது.
கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்ற புகையிரதத்தில்பயணித்த பயணியாக இருக்கலாம்என சந்தேகிக்கப்படுகிறது மேலதிக விசாரணையை ஓமந்தை பொலிஸார் நடத்தி வருகின்றனர்.
No comments:
Post a Comment